நிரல்
மார்ச் 13 07:02

யாழ்.பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் எழுச்சிப் பேரணி - தமிழினப் படுகொலையைக் காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி ஆரம்பம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த தமிழின அழிப்புக்கு சர்வதேசம் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி ஈழத்தமிழ் காத்திருக்கின்ற போதும் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வருகின்றது. இவ்வாறான நிலையில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினால் பாரிய மக்கள் எழுச்சிப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழினப் படுகொலையைக் காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13 06:32

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள் - விக்னேஸ்வரன் சாடல்

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால், அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம் கொடுத்தால் தமக்கு அது வரை நல்ல காலம் என்ற நோக்கில் கால அவகாசத்தை சிபார்சு செய்யலாம். தேர்தலில் நிற்காமலேயே அவர்கள் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் காத்திருக்கின்றன. எம்மால் அது முடியாது. தமிழர்களை இனியும் ஏமாற்றிக்கொண்டிருக்க எம்மால் முடியவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 12 22:12

நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம் - கூட்டமைப்பு ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஜக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மகிந்த ராஜபக்ச தரப்பினால் தோற்கடிக்கப்படுமென்ற எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் 43 மேலதிக வாக்குகளினால் அது இன்று செவ்வாய்க்கிழமை மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக76 வாக்குகளும் பெறப்பட்டன. அரசாங்கத் தரப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மார்ச் 12 10:06

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் நஷ்டஈடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) போருக்கு முன்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலிலும் வடக்கு - கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இந்த உதவி தொடர்பாக கூறியுள்ளார். ஆனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
மார்ச் 11 23:32

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெறும் நிலையில் இலங்கைப் படையினர் மீது விசாரணை

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கைப் படையினர் மீதான உள்ளக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்றது. ஆனாலும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கைதுசெய்ய வேண்டாம் என இலங்கை உயர் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும் விசாரணைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. இதனால் இன்று திங்கட்கிழமை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் எட்டு மணி நேர விசாரணை இடம்பெற்றது. கொழும்பில் பதினொரு இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவே அட்மிரல் கரன்னகொடவிடம் விசாரணை இடம்பெற்றது.
மார்ச் 11 07:13

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் உண்ணாவிரதம்- தொடர்ந்து போராடவுள்ளதாகவும் எச்சரிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் யாழ்ப்பாணம் மருதங்கேணி வைத்தியசாலையில் இருபத்து நான்கு மணி நேரமும் வைத்தியர்கள் கடமையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீரப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிரசாந்தன் என்பவரால் மருதங்கேணி வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழைமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
மார்ச் 11 06:49

மன்னாரில் காணாமல் போனோருக்கான அலுவலகம் - பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என சந்தேகம்?

(மன்னார், ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு காலந்தாழ்த்தாது விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் OMP எனப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழர் தாயகப்பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் பேராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் திறக்கப்படவுள்ளது.
மார்ச் 10 15:52

மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கிய பெண்கள் நுண்கடன் திட்டத்திலிருந்து மீள்வது எப்போது?

(வவுனியா, ஈழம்) மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கி, பல சவால்களுக்கு மத்தியில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் மீள்குடியேறியுள்ள மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சுரண்டல் செயற்பாடுகள் கேட்பாரற்று தொடர்கின்றன. இந்நிலையில் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் சித்திரவதைப்படும் பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 10 13:17

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - அணிதிரளுமாறு அழைப்பு

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்த போதிலும் போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுமையாக கட்டியெழுப்பப்படாதுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
மார்ச் 09 23:35

சம்பந்தனுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உயர்ந்த கெளரவம் - கொழும்பில் ஒன்றரை ஏக்கரில் ஆடம்பர வீடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பதால் இலங்கை அரசாங்கத்தால் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரவையில் விசேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்துள்ளார். 13 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக் காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு சமர்ப்பித்த பிரேரணையே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.