(யாழ்ப்பாணம், ஈழம் )
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னர், இலங்கையில் குறிப்பாக கிழக்கில் வாழும் முஸ்லீம் மக்கள் இலங்கை இராணுவத்தின் சோதனைக் கெடுபிடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். கல்முனை - சவளக்கடை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல், துப்பாக்கிப் பிரயோகம் ஆகியவற்றுக்கிடையில் சிக்கி அப்பாவி முஸ்லீம் மக்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதும், இலங்கை அரசாங்கம் அவ்வாறு கூறவில்லை. இந்த நிலையில் அன்று ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்த பசீர் சேகுதாவூத் (Basheer Segu Dawood) தனது முகநுால் பதவில் தற்கொலைத் தாக்குதலின் விளைவுகள் பற்றிக் கூறியள்ளார்.