(யாழ்ப்பாணம், ஈழம் )
கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பு பலகத்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது, பொதுச் சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக நஷ்டஈடு வழங்குமாறும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சேதவிபரங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் சேதங்கள் பற்றிய மதிப்பீடுகள் செய்யப்படவுள்ளன.