(யாழ்ப்பாணம், ஈழம் )
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளில் முற்றுழுதாக நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றின் ஊடாக ஈழத் தமிழர்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்ற எதிர்ப்பு மக்களிடம் காணப்படுன்றது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதால் அரசியல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையீனங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் தமிழ் இனப்படுகொலைதான் நடந்தது என்பதை மூடி மறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக, மக்கள் மத்தியில் வலுவான சந்தேகங்களும் நிலவுகின்றன. இந்த நிலையில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் வட மாகாணத்திற்குச் சென்று மக்களின் கருத்துக்களை அறிகின்றனர்.