கட்டுரை: நிரல்
மார்ச் 14 23:33

இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதனை சர்வதேச ஆதரவுடன் பாதுகாப்பதே சிங்களக் கட்சிகளின் நோக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை சிங்கள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனக் கோரினார். இலங்கை இராணுவத்தை உள்ளநாட்டில் விசாரணை செய்யலாம் என்றவொரு அத்தியாயம் ஜெனீவா பிரேரணையில் உள்ளது. பிரித்தானிய அரசு அந்த அத்தியாயத்தை பிரதானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மார்ச் 12 10:06

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் நஷ்டஈடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) போருக்கு முன்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ற்குப் பின்னரான சூழலிலும் வடக்கு - கிழக்கு, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்கு ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இந்த உதவி தொடர்பாக கூறியுள்ளார். ஆனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே மாதம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
மார்ச் 10 15:52

மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கிய பெண்கள் நுண்கடன் திட்டத்திலிருந்து மீள்வது எப்போது?

(வவுனியா, ஈழம்) மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கி, பல சவால்களுக்கு மத்தியில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் மீள்குடியேறியுள்ள மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சுரண்டல் செயற்பாடுகள் கேட்பாரற்று தொடர்கின்றன. இந்நிலையில் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் சித்திரவதைப்படும் பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 08 10:51

ஜெனீவா மனித உரிமைச் சபையில் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள் - யாழ்ப்பாணத்திற்குப் படையெடுக்கும் இராஜதந்திரிகள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளில் முற்றுழுதாக நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றின் ஊடாக ஈழத் தமிழர்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்ற எதிர்ப்பு மக்களிடம் காணப்படுன்றது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதால் அரசியல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையீனங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் தமிழ் இனப்படுகொலைதான் நடந்தது என்பதை மூடி மறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக, மக்கள் மத்தியில் வலுவான சந்தேகங்களும் நிலவுகின்றன. இந்த நிலையில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் வட மாகாணத்திற்குச் சென்று மக்களின் கருத்துக்களை அறிகின்றனர்.
மார்ச் 03 23:48

வடமாகாண சபையின் தீர்மானத்தை விக்னேஸ்வரன் ஜெனீவா மனித உரிமைச் சபையிடம் கையளிப்பாரா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசம் கொடுப்பதால், எதுவும் நடந்துவிடாது என தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அல்லாத தமிழ்த்தரப்பு கூறுகின்றது. ஈழத் தமிழர்கள் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா, கால அவகாசம் வழங்கக்கூடாது என்கிறார். ஆனால் கால அவகாசம் வழங்குவதே நல்லது என கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தான் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரமங்கமாகவே தெரிவித்துள்ளார்.
பெப். 15 10:53

போதைப் பொருள் பாவனையின் கூடாரமாக மாறி வரும் கொழும்பு- கொட்டாஞ்சேனையில் பெண் மீது துப்பாக்கிச் சூடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் ஒழிப்புத் தொடாபான விழிப்புணர்வு நடவடிக்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், போதைப் பொருள் வியாபரத்துடன் இலங்கைப் படையினருக்குத் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேங்களில் படையினர் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விநியோகிப்பதாக முன்னாள் வடமாகாண சபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் 639 கிராம் ஹெரோயினுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள விசேட அதிரடிப்படை படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கலகெதரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப். 08 10:47

அமெரிக்காவின் படைத்தளம்- சிங்கள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டாலும் மறைமுக ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழ்பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் அமெரிக்கா படைத் தளங்களை அமைத்து வருவதாக கொழும்பை மையப்படுத்திய இலங்கை எதிர்க்கட்சிகளினால் குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக ஜே.வி.பி.உறுப்பினர் பிமல் ரட்ணநாயக்கா கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்யப்படுவது வழமை என்று கூறினார்.
பெப். 03 22:59

பாக்கிஸ்தான் கடற்பரப்பில் இடம்பெறவுள்ள கூட்டுப் பயிற்சியில் இலங்கைக் கடற்படையும் பங்கேற்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) நாற்பத்து நான்கு நாடுகளின் கடற்படையினர் பங்குபற்றும் அமான் 2019 என்ற பெயரிலான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி எதிர்வரும் எட்டாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், இலங்கைக் கடற்படையும் பங்குகொள்ளவுள்ளது. கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சயுரால என்ற இலங்கைக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை பாகிஸ்தான் நோக்கிப் பயணமாகியுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி பாகிஸ்தான் - கராச்சி துறைமுகத்தை அந்தக் கப்பல் சென்றடையும் என இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 28 அதிகாரிகள், 142 மாலுமிகள் உட்பட 170 இலங்கை கடற்படை அதிகாரிகள் சென்றுள்ளனா். இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்குகொள்ளவில்லை.
ஜன. 22 21:34

இலங்கையில் நெருக்கடிக்குள்ளாகி வரும் சிங்கள அரசியல் கட்சிகள் - சந்திரிக்கா புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சந்திரிக்கா அந்தக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிப்பார் என்றும் அது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மூத்த உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவுடன் ஏலவே முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபகாலமாக ஏற்பட்ட முரண்பாடுகள் குழப்பங்களினால் சந்திரிக்கா அதிருப்தியடைந்துள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஜன. 21 09:57

பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய அனந்தி சசிதரன் இதுவரை ஆதரவு வழங்கவில்லை.