கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
செப். 14 21:31

உள்ளக விசாரணையை வலியுறுத்தும் ஜெனீவாத் தீர்மானம்- உறுப்பு நாடுகளிடம் வரைபு கையளிப்பு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புச் சட்டதிட்டங்களின் படி சர்வதேச தரத்திலான விசாரணைக்கு ஏற்றவாறு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளை வலுப்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்மானத்தின் பிரதிகள், தற்போது இலங்கை விவகாரம் தொடர்பான கருக்குழு நாடுகளிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணையின்போது சர்வதேசத் தொழில்நுட்ப உதவிகளுக்குரிய ஒத்துழைப்புகளைப் பெற வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆறு பக்கங்களில் குறித்த தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
செப். 06 09:22

இந்தியா வழங்கியதையும்விட குறைவான நிதியுதவிகளை வழங்கிய சர்வதேச நாணய நிதியம்

(வவுனியா, ஈழம்) இந்தியா ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு வழங்கிய சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட அரைவாசித் தொகையை மாத்திரமே ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. அதுவும் இலங்கை அரசாங்கம் உறுதியளித்தபடி தனது பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்தால் மாத்திரமே தீர்மானிக்கப்பட்ட நிதியை வழங்க முடியுமென ஐ.எம்.எப் மூத்த அதிகாரி பீற்றர் ப்ரூயர் (Peter Breuer) கூறுகிறார். நீண்ட பாதையின் ஒரு ஆரம்பம் மாத்திரமே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆகவே இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தாலும், மெதுவான எச்சரிக்கை ஒன்றையும் ஐ.எம்.எப் இலங்கைக்கு விட்டுச் சென்றிருக்கின்றது.
செப். 04 08:42

ஜெனீவாவுக்குக் கணக்குக் காட்ட அரசாங்கத்துக்கு வசதியாக அமைந்த யாழ் ஆயர் யஸ்ரின் - ரணில் சந்திப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வு எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில். இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ் ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசத்தைச் சென்ற பதினெட்டாம் திகதி ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இச் சந்திப்புக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தாரா அல்லது ஆயர் யஸ்ரின் சந்திப்பதற்கான நேரத்தைக் கேட்டெடுத்தாரா என்று தெரியவில்லை. ஆனாலும் இச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் சார்பாகக் கவனம் எடுக்கின்றது என்ற ஒரு பொய்யான பரப்புரையைச் சர்வதேச அரங்கில் மேற்கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.
ஓகஸ்ட் 28 23:13

சர்வதேச நாணய நிதியத்தை இறுக்கிப் பிடிக்கும் சீனா

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான இலங்கைத்தீவின் பொருளாதார நிலைமை அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதாக அமையுமென வடமேல் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா பி.பி.சி செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். அதிகளவு கடன் வழங்கிய சீன அரசு, இலங்கைக்கு மேலும் கடன் வழங்கவும் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கும் விதிக்கப்படும் நிபந்தனைகள் இலங்கைக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்துள்ளதாகக் கருதப்படும் நிலையில் இக் கருத்தைப் பேராசிரியர் வெளியிட்டிருக்கிறார். இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், நிலையான மத்திய வங்கி வேண்டும்.
ஓகஸ்ட் 21 13:12

இலங்கைத்தீவுக்கான நல்லிணக்கத்தை மாத்திரமே நிபந்தனையாக முன்வைக்கும் சர்வதேச நாணய நிதியம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் கடன் நெருக்கடி மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தால் மாத்திரமே, பொருளாதார நெருக்கடியில் இருந்து குறைந்தபட்சம் மீண்டெழ முடியும். இதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுகிறார். தேசிய அரசாங்கத்தை அமைக்காமல் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைத்தால், பாரிய நிதியுதவிகள் எதனையும் சர்வதேச நாணய நிதியும் வழங்காது.
ஓகஸ்ட் 13 22:49

ஜெனீவாவைக் கையாளும் புதிய அணுகுமுறை - தமிழர்களையும் உள்ளடக்கிய பொறிமுறை உருவாக்கத் திட்டம்

(வவுனியா, ஈழம்) செப்ரெம்பர் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்குக் கூடுதல் அழுத்தங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு, இன அழிப்பு மற்றும் சர்வதேசம் கூறுகின்ற போர்க்குற்ற விசாரணைகள் குறித்த விடயங்கள் எதிலும் அந்த அழுத்தங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம், ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகள், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தமக்குரிய புவிசார் அரசியல் நகர்வுகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தே, ஜெனீவா மனித உரிமைச் சபையில் தீர்மானங்களை முன்வைப்பர் என்பது வெளிப்படை.
ஓகஸ்ட் 08 21:39

தொடரப்போகும் நிதி நெருக்கடி - சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை

(வவுனியா, ஈழம்) கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளிடம் இருந்து தொடர்ச்சியாகப் பெருமளவு நிதியுதவிகளைப் பெறக்கூடிய சூழல் அருகிக் கொண்டே செல்கின்றது. ரசிய - உக்ரெய்ன் போரினால், தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சர்வதேச நாடுகள் குறிப்பாக ரசியாவுக்கு எதிரான நாடுகள் உக்ரெய்ன் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவது என்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ரசியாவுக்கு எதிரான போருக்கு உக்ரெய்ன் நாட்டுக்கு உதவியளிப்பதிலும் இந்த நாடுகளின் கவனம் மேலோங்கியுள்ளது.
ஜூலை 21 22:51

இறைமையைப் பாதுகாக்கும் ரணில்- தமிழ்த்தரப்புச் செய்ய வேண்டியது என்ன?

(வவுனியா, ஈழம்) ஓற்றையாட்சியைப் பாதுகாக்கும் இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் எவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசியல் யாப்பைப் பாதுகாப்பேன் என்று கூறியே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். அரசியல் யாப்பைப் பாதுகாப்பது என்பது பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒற்றையாட்சி முறையைக் குறிக்கும். பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு, பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, முப்படைத் தளபதிகளைச் சந்திக்கிறார் ரணில். பௌத்த விகாரைக்குச் செல்கிறார். இவைதான் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் முதற் கடமை என்பதை ரணில் தனது செயற்பாட்டின் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
ஜூலை 14 11:55

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் வகையில் தமிழ்த்தேசிய அரசியல் பிரகடனம் மேற்கொள்ளப்பட வேண்டிய தருணம் இது

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரி தென் இலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்களை ஒரு கிளர்ச்சியின் வெளிப்பாடுகளாக மட்டுமே ஈழத்தமிழர்கள் அணுக வேண்டும். அந்தக் கிளர்ச்சியானது ஓர் அரசியல் புரட்சி அல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகிறது. புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர். இக் கிளர்ச்சி கடந்த சனிக்கிழமை ஒன்பதாம் திகதியன்று மேலும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ஆனால், இந்தக் கிளர்ச்சியை இயக்கியவர்களால் ஓர் அரசியல் புரட்சியாக இதனை மாற்ற முடியாமல் போனதை ஈழத்தமிழர்கள் இரண்டு காரணங்கள் ஊடாக நோக்க வேண்டும்.
ஜூலை 11 11:02

அமெரிக்க - இந்திய அரசுகளிடையேயான பனிப்போர் இலங்கை விடயத்தில் தாக்கம் செலுத்தவில்லை

(வவுனியா, ஈழம்) ரசிய- உக்ரெய்ன் போரினால் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கிடையே பனிப்போர் மூண்டுள்ளது என்பது உண்மை. ஆனால் இந்த இரு நாடுகளும் இலங்கை விவகாரத்தில் ஒரே புள்ளியில் நின்றுதான் செயற்படுகின்றன என்பதைக் கூர்மைச் செய்தித் தளம் பல தடவை கூறியிருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கச் சார்புடையவர் என்பதும், இந்தியாவுடனான இலங்கையின் உறவுகூட அமெரிக்காவுக்கும் விருப்பமான நகர்வுதான் என்பதும் வெளிப்படை. சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முடிவெடுத்தாலும், அடுத்த வரவுள்ள ஜனாதிபதிகூட அமெரிக்க - இந்தியச் சார்புப் போக்கைக் கையாள வேண்டும் என்ற சமிக்ஞைகள் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மூலம் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.