(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே உக்கிர மோதல் இடம்பெறுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்த வேண்டுமென மைத்திரி கேட்டுக்கொண்ட போதும், தொடர்ச்சியாக அந்த அமர்வு நடைபெறுகின்றது. அதனால், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிடாமல் மைத்திரிபால சிறிசேன தடுத்ததால், ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அமைச்சர்களுடன் பேசித் தீர்மானித்து வருகின்றார். இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தை கூடுவதற்கு மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.