(மன்னார், ஈழம்)
இலங்கைக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதற்கு இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்குதாகவும் தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்கள் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கி வருகின்றனர் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த நிலையில் தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, சிலாவத்துறை ஆகிய கரையோரப் பிரதேசங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறுகின்றனர். தமிழ்நாட்டுக் கரையோரங்களில் இருந்து கெரோயின், கஞ்சா, போதையூட்டப்பட்ட பாக்கு வகைகள் மன்னார் கரையோரப் பகுதிகளுக்கு படகுகள் மூலமாக தினமும் எடுத்து வரப்படுகின்றன.