செப். 22 15:19
(முல்லைத்தீவு, ஈழம்)
தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு பழைய செம்மலை நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்குரிய வளாகத்தின் ஒரு பகுதியை இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் அபகரித்து விகாரை ஒன்றை அமைத்துத் தங்கியிருந்த மேதாலங்கார கீர்த்தி (Medhalankara Thero) என்ற பௌத்த பிக்கு, புற்றுநோயால் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய சடலத்தை குறித்த விகாரை வளாகத்துக்குள் தகனம் செய்ய முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. உயிரிழந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குக் கொண்டுவந்து இறுதிக் கிரியைகளை நடத்த இலங்கைப் படையினருடன் பிக்குமார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.