செப். 28 23:01
(அம்பாறை, ஈழம்)
ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொழும்பு. மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னரான சூழலில், இலங்கைத் தீவில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இலங்கைப் படையினர் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டபோதும் மேலும் பலர் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கை இராணுவத்தினர் திடீரெனத் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.