ஜன. 12 12:07
(யாழ்ப்பாணம், ஈழம்)
வடமாகாணம் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் இலங்கை விசேட அதிரடிப்படையினர், இலங்கைப் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 தொடக்கம் ஆறு மணி வரை தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வடக்குக்- கிழக்குப் பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கைத் தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியே தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.