(வவுனியா, ஈழம்)
வடக்குக் கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி சிங்கள மக்களினால் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய முடியுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். காலி பத்தேகம பிரதேசத்தல் நேற்றுப் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அரசாங்கத்தை அமைத்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியுமென்றும் கூறினார். சென்ற புதன்கிழமை தமிழ் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறியிருந்தார்.