நவ. 15 21:59
(வவுனியா, ஈழம்)
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நாளை செவ்வாய்க்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், நாளை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பொது ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்கள் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. கொவிட் 19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் புதிய சுகாதார விதிமுறை இன்று திங்கட்கிழமை மாலை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறையிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவர் அசேல குணவர்தன தடைவிதித்துள்ளதாக அறிவித்துள்ளார்.