செய்தி: நிரல்
ஜூன் 07 23:04

மக்கள் இரண்டு வேளை மாத்திரம் உணவு அருந்த வேண்டுமென ரணில் கூறியமைக்குக் கடும் விமர்சனம்

(வவுனியா, ஈழம்) பொருளாதார நெருக்கடியினால், மக்கள் இரண்டு வேளை சாப்பிடுவதற்குத் தயாராக வேண்டுமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம், மக்கள் இரண்டுவேளை மாத்திரமே சாப்பிட வேண்டும் என்று கூறுவது வெட்கக் கேடானதென தொழிற்சங்க சம்மேளம் கண்டித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரணில் விக்கிரமசிங்க செவ்வாய் 07 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். இந்த உரையின் பின்னர் விவாதம் இடம்பெற்றது.
ஜூன் 04 19:43

தலை மன்னார் மணல் தீடையில் மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள, மணல் தீடையில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த ஏழு தமிழ் மீனவர்கள் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் ஏழு பேர் தாக்குதல் உள்ளாகியது தொடர்பில் பேசாலை மீனவர் சங்கத்திற்கும், பேசாலை பங்கு தந்தைக்கும், தாக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ள நிலையில் கடற்படை உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 02 20:42

கொழும்பில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்து- மாநகர சபை எச்சரிக்கை

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு நகரில் உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ளதாக கொழும்பு மாநாகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களைப் பயமுறுத்தவில்லை என்றும் ஆனால் வரவுள்ள உணவு நெருக்கடி பற்றி மக்களைத் தயார்ப்படுத்தவே இதனைக் கூறுவதாகவும் அவர் சொன்னார். கொழும்பு நகர மொத்த சனத்தொகையில் குறைந்த வருமானம் பெறும் சுமார் 60 வீதமானோர் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ரோசி சேனநாயக்கா கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
ஜூன் 01 22:58

யாழ் நூலக எரிப்பு நினைவுகூரல் கொழும்பு காலிமுகத் திடலில்

(வவுனியா, ஈழம்) யாழ் நூலகம் எரிக்கப்பட்டு நாற்பத்தியொரு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு. கொழும்பு காலிமுகத் திடலில் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், தீபம் ஏற்றி நினைவு கூர்ந்தனர். கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், யாழ் நூலக எரிப்புக்குக் கண்டனம் வெளியிட்டதுடன் இனவாதச் செயல் இனிமேலும் தொடர இடமளிக்க முடியாதெனவும் கூறினர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற நினைவு கூரும் நிகழ்வில், சிங்கள முற்போக்காளர்கள், சிங்கள மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்குபற்றினர்.
மே 31 08:42

மன்னாரில் போதைப் பொருள் பயன்படுத்திய இருவர் மரணம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் பேசாலையில் இருந்து காரொன்றில் கொழும்பு நோக்கி பயணித்தவேளை அதிக அளவு போதைவஸ்தைப் பயன்படுத்திய இளம் குடும்பஸ்தர்கள் இருவர் பயணத்தின் இடைநடுவே திடீர் சுகயீனம் அடைந்து 30ஆம் திகதி திங்கட்கிழமை இரவு மரணமடைந்துள்ளனர். மரணமடைந்த இருவரின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலங்கள் இரண்டும் விசேட சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூறு ஆய்வுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மே 29 07:34

வடக்குக் கிழக்கில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு இந்திய நிவாரணம்

(மன்னார், ஈழம்) இலங்கைக்கு வந்தடைந்துள்ள இந்திய நாட்டின் மனிதாபிமான உதவி திட்டத்தின் கீழான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களில் வாழும் சுமார் 3 லட்சத்து 46 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு எதிர்வரும் திங்கள் முதல் விநியோகிக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களையும் நிர்வகிக்கும் அரசாங்க அதிபர்களின் மேற்பார்வையில் துரித கதியில் மேற்கொள்ளபட்டு வருகிறது.
மே 28 07:04

கொழும்பில் ஒன்றுகூடிய இளைஞர்கள்- நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறிப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஐம்பது நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி காலிமுகத் திடலில் தொடர் போராட்டம் ஆரம்பமாகியது. கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பதவி விலகுமாறு வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சென்ற ஒன்பதாம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அலரி மாளிகை முன்பாக தொடர் போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
மே 26 09:10

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 21 ஆவது திருத்தச் சட்டம்- அரசுக்குள் குழப்பம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பது தொடர்பான 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக்கூடிய வாய்ப்புகள் இல்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. திருத்தச் சட்டத்துக்கான நகல்வரைபு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடாமல் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் அதிருப்திகள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மே 25 08:04

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசதரப்பு உறுப்பினர்கள் பலர் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை

(வவுனியா, ஈழம்) கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருந்த கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற மைனா கோ கம தாக்குதல் குறித்த வழக்குகள் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள் இதுவரையில் தமது கடவுச்சீட்டை கொழும்பு நீதிமன்றில் ஒப்படைக்கவில்லையென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதல்கள் சென்ற ஒன்பதாம் திகதி நடைபெற்றிருந்தன.
மே 23 21:32

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் நகல் வரைபு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகுமாறு கோரி காலிமுகத் திடலில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கான நகல் வரைபு இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 21 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்த குழு தயாரித்த பரிந்துரைகளே நகல் வரைபாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கவனத்துக்கும் இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டு முழுமையான நகல் வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.