நவ. 08 21:31
(யாழ்ப்பாணம், ஈழம்)
இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவதாகக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசியல் யாப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குவதாகவும் பேராயர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிரபராதியென விடுதலை செய்யப்பட்ட பின்னர் கருத்துக்கூறாமல் அமைதிகாத்திருந்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.