நிரல்
ஏப். 01 23:08

பலஸ்தீன மேற்குக் கரை மற்றும் காஸா போன்று மாறிவரும் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை

(முல்லைத்தீவு) இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்கிறது. பலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல், முழு நகரையும் உரிமையாக்க முற்படுவதை அங்கீகரித்துள்ள அமெரிக்காவும் வேறு சில ஐரோப்பிய நாடுகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு இலட்சம் யூதர்கள் குடியேற்றப்பட்டதைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சட்டங்களின்படி இக் குடியேற்றங்கள் தவறு என்றும் அமைதிக்குத் தடையாக உள்ளதாகவும் பலத்தீனம் கூறினாலும், இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மறுக்கின்றது.
மார்ச் 29 22:22

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு சஜித் அணி கோரிக்கை

(வவுனியா, ஈழம்) எரிபொருள் சந்தை தாராளமயமாக்கல், மத்திய வங்கி திருத்தச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கருத்துக்களை முன்வைத்த சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்கள் அங்கீகாரம் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அங்கீகாரத்தைப் பெற்றால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் விளக்கினர்.
மார்ச் 26 09:36

வள்ளுவரும் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையும்

(மட்டக்களப்பு, ஈழம்) 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசியல் உத்திகள் நுட்பமாக வகுக்கப்பட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் மெது மெதுவாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், தமிழ்த்தேசியச் சிந்தனையை மேலும் மடைமாற்றக்கூடிய முறையில் சமயக் கோட்பாடுகள் மிகைப்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் ஈழத்தமிழ் அறிஞர்களான கா.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்றோர் வள்ளுவம் ஊடாகத் தமிழினத்தை ஒன்றுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய மீள் பார்வை அவசியமாகிறது. 'குறள் ஆய்வுச் செம்மல்' 'உலகத் தமிழர் செம்மல்' ஆகிய பல பட்டங்களைப் பெற்ற ஈழத்தமிழ் அறிஞர் கா.பொ. இரத்தினம், வள்ளுவரை சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று வரைவு செய்திருக்கின்றார்.
மார்ச் 19 06:37

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களும், பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானைக் கைது செய்வதற்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருவதன் பின்னணியில் புவிசார் அரசியல் - பொருளாதாரக் காரணிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. சீனச் சார்புடைய இம்ரான்கானைக் கைது செய்ய பாகிஸ்தான் பொலிஸார் திட்டமிட்டதால் எழுந்த போராட்டங்கள், வன்முறைகள் போன்றவற்றுக்கு மத்தியிலேதான் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதுவர் டொனால்ட் புளோமி (Donald Blome) நான்கு தசம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். ஏனெனில் இம்ரான் கானின் அரசியல் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. ஆதரவுப் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.
மார்ச் 17 17:36

தொழிற்சங்கப் போராட்டங்கள் தற்காலிக நிறுத்தம்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தின் அடக்கு முறை நிறுத்தப்பட்டு அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் வரி நீக்கம் போன்றவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவிக்க மறுத்தால் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் உரிய பதில் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக தொழிற் சங்க நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் பங்கொள்ள வேண்டும் எனவும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மார்ச் 12 10:03

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக முப்பது அரச - தனியார் துறை தொழிற் சங்கங்கள் சில இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள், சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள கடன் திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் விஞ்சிக் காணப்படுகின்றன. தொடர் போராட்டங்களினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுவதை நம்பக் கூடிய மன நிலையில் மக்கள் இல்லை. பிரித்தானிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்திய பயண எச்சரிக்கை இலங்கைத்தீவின் அரசியல் நெருக்கடியையும் பகிரங்கப்படுத்தியுள்ளது. இப் போராட்டத்தில் பிரதான எதிர்க் கட்சியான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாகப் பங்குபற்றில்லை. ஆனாலும் ஆதரவு கொடுத்துள்ளது.
மார்ச் 10 17:57

தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சரத் வீரசேகர நியமனம்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகின்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர இலங்கைத் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் முன்வைத்த கூட்டுப் பிரேரணையின் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 08 22:53

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கமும் மோதலும் ஏற்பட்டது. களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்று இரவு வரை தொடர்ந்ததால் பொலிஸார் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் பல மாணவர்கள் பலர் சிதறி ஓடினர். வேறு பல மாணவர்கள் பொலிஸாருடன் நேருக்கு நேராக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
மார்ச் 07 09:42

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை சபையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜெனீவா மனித உரிமைச் சபையுடன் இலங்கை தொடர்ந்து உரையாடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இலங்கை தொடர்பான ஒவ்வொரு ஆண்டுக்குமான ஆறாவது காலகட்ட மீளாய்வு மார்ச் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
மார்ச் 05 09:39

ஜீ 20 மாநாட்டில் விட்டுக்கொடுக்காத வல்லரசுகள்

(வவுனியா, ஈழம்) ரசிய - உக்ரெயன் போரை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத நிலையில், ஜீ இருபதின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்த மாதம் இரண்டாம் திகதி வியாழக்கிழமை மாலை வரை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. தலைமைப் பொறுப்பை நரேந்திரமோடி ஏற்றதால் புதுடில்லியில் இடம்பெற்ற மாநாட்டில், உக்ரெய்ன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரசியாவுக்குப் புத்தி சொல்ல வேண்டும் என்ற இறுமாப்புடனேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்குபற்றியிருந்தன. வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களில் போரை நிறுத்துவது பற்றி மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் கசிந்திருந்தன.