செப். 03 15:15
(யாழ்ப்பாணம், ஈழம் )
யாழ்ப்பாணம் வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான ஏழு கட்டடங்கள் இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் அரச கட்டங்கள் பலவற்றை இலங்கை இராணும் பயன்படுத்துவதாகவும் அவற்றை பொதுமக்களிடமும் வலி வடக்கு பிரதேச சபையிடமும் கையளிக்க வேண்டும் என சுகிர்த்ன் வலியுறுத்தயுள்ளார். வலி வடக்கு பிரதேச சபையின் தலைமைக் கட்டடம் இதுவரை கையளிக்கப்படவில்லை. சபையின் காங்கேசன்துறை அலுவலகத்திற்குரிய நூல் நிலையம், சிறுவர் பூங்கா, வாடிவீடு ஆகியவற்றில் இலங்கைப் படையினர் தங்கியுள்ளனர். அத்துடன் குரும்பசிட்டி, வசாவிளான், காங்கேசன்துறை ஆகிய மூன்று மைதானங்களும் இலங்கைப் படையினரின் பாவனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.