நவ. 28 08:50
(மன்னார், ஈழம்)
ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமலும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்ளாமலும், அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவரும், மைத்திரி - மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்கு, சர்வதேசம் பாடம் புகட்டுமெனவும், இதற்கான காலம் தற்போது உதயமாகியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்து, நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.