டிச. 05 11:13
(கிளிநொச்சி, ஈழம்)
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரும் மனு மீதான விசாரணை ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேர மற்றும் பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னதாக கலைப்பதற்கான அதிகாரம் அரசியல் அமைப்பில் ஜனாதிபதி்க்கு இல்லை என்று மனுதாரர்கள் சார்பில் முன்லையான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.