நிரல்
ஜன. 09 14:30

மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத நோயினால் கால்நடைகள் உயிரிழப்பு - திட்டமிட்டா சதியா என தொழிலாளர்கள் சந்தேகம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மைலத்தமடு மற்றும் பெரிய மாதவணைப் பகுதியில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை பகுதியில் உள்ள கால்நடைகள் அடையாளங்காணப்படாத தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான மருந்துகளைக் கொடுத்தவுடன் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படத்துவதாக கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் செயலாளர் த.நிமலன் தெரிவித்தார்.
ஜன. 05 09:27

அரசியலில் தொடர் மாற்றம் - மாகாணங்களுக்கான ஆளுநர்கள் புதிதாக நியமனம்

(மன்னார், ஈழம்) இலங்கையில் கடந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதாக பல தரப்பினரும் குற்றம்சுமத்திவரும் நிலையில் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பிரதமர் மாற்றத்தில் ஏற்பட்ட குழறுபடியை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மாகாண ஆளுநர்கள் மாற்றப்பட்டு புதிய ஆளுநர்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
ஜன. 04 22:58

இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி செட்டிகுளம் - இராமியன்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற இன அழிப்புப் போரைத் தொடர்ந்து தமிழ் பேசும் மக்களது காணிகளை அபகரித்துள்ள இலங்கை இராணுவம், அதில் விவசாயம் உட்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், வவுனியா, செட்டிகுளம் - இராமியன்குளம் பகுதியில் மக்களின் காணிகளை கையகப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம், அதில் விவசாயம் செய்வதாவும் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தி குறித்த காணிகளை மக்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தி பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜன. 04 14:06

தேசமான்ய விருதை உத்தியோகபூர்வமாக மைத்திரியிடம் திருப்பிக் கொடுத்தார் தேவநேசன் நேசையா

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் ஜனநாயகம் மீறப்பட்டமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை அதனை தனக்கு வழங்கிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை கையளித்துள்ளார். ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ள ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரி கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப் போவதாக அறிவித்திருந்தார்.
ஜன. 04 09:54

நீதி கோரி வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - மாணவர்கள், மக்கள் வீதிகளில்

(வவுனியா, ஈழம்) வடக்கு மாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களாகிய தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜன. 04 09:15

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக நீதிமன்றத்தை நாடப்போவதில்லை - எமது நோக்கம் அதுவல்ல - மாவை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையைத் தணிப்பதற்காக என்று தெரிவித்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆட்சி அதிகாரங்கள் நீக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டுவருவதற்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது சம்மந்தனிடம் இருந்து மீளப்பெறப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதில்லை எனவும், அதற்காக நீதிமன்றத்தை நாடப்போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜன. 03 19:32

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா இழப்பீடு வழங்கிவைப்பு - சபாநாயகர் வடக்குக்கு விஜயம்

(முல்லைத்தீவு, ஈழம்) வடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலை தற்போது சீரடைந்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதி முகாம்களிலிருந்து தத்தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ள நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பத்தாயிரம் ரூபா இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஜன. 03 10:16

நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருடமொன்றுக்கான வரவு செலவுத் திட்டம் அதற்கு முன்னைய ஆண்டின் இறுதிக் காலாண்டில் முன்வைக்கப்பட்டு அதற்கான விவாதங்கள் இடம்பெற்று பின்னர் நிறைவேற்றப்பட்டு புதிய ஆண்டுக்கான செயற்பாடுகள் இலங்கை நிதியமைச்சின் ஊடாக நடைபெறுவது வழமை. ஆயினும் இலங்கை ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி காரணமாக வரவு செலவுத்திட்டம் உட்பட 2019 ஆம் ஆண்டுக்கான தீர்மானங்கள் எவையும் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் முழுமையாக எடுக்கப்படாது அரசியல் அதிகாரத்துக்கான பதவி மோகத்தினால் அரசியல்வாதிகள் முட்டிமோதிய சம்பவமே கடந்த வருட இறுதியில் நடைபெற்றது.
ஜன. 03 09:15

நேர்மையான அதிகாரப் பகிர்வையுடைய புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்பட்டால் ஆதரவு வழங்க தயார் - சம்பந்தன்

(கிளிநொச்சி, ஈழம்) மக்களும் பிராந்திய, மாகாண அரசுகளும் அதிகாரங்களைப் பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வையுடைய புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும்போது அது நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்ற இலங்கை நட்புக்குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்தார். இச் சந்திப்பின்போதே இரா.சம்பந்தன் அவரிடம் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பு செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
ஜன. 02 23:38

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் - நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரி - ரணில் தரப்பு இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு அரசியல் கட்சிகளும் விரும்பியுள்ளதாகவும் அதற்கேற்ற முறையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.