ஜன. 18 11:20
(கிளிநொச்சி, ஈழம்)
தமிழர் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் போக்குவரத்து நடவடிக்கையால் வீதியில் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இறுதிக்கட்ட இன அழிப்பு போர் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவத்தினர் தமது கனரக வாகனங்களில் வீதிகளில் வேகமாக பயணிப்பதாகவும் வேகக் கட்டுப்பாட்டை அவர்கள் பின்பற்றுவதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாயகப் பகுதிகளில் இல்ங்கை இராணுவத்தினரின் வானங்களால் விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.