பெப். 28 09:28
(யாழ்ப்பாணம், ஈழம் )
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து பாக்கிஸ்தானின் கராச்சி, லகூர் நகரங்களுக்கான விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சின் உத்தரவுக்கு இணங்க ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கடந்த சில நாட்களாக முரண்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலும் போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருதரப்பும், போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகார சபை, தமது நாட்டின் வான் பரப்பின் ஊடான விமானப் பயணங்களுக்கு அனுமதியும் மறுத்துள்ளது.