(யாழ்ப்பாணம், ஈழம்)
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பை மையப்படுத்திய மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவி விலக்குமாறு கோரி இலங்கையின் தலைநகர் கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களில் பௌத்த குருமார் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுழற்சி முறையில் பௌத்த பிக்குமார் கலந்துகொள்கின்றனர். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கின்றார். நூற்றுக்கும் அதிகமான பௌத்த குருமார் தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக சுழற்சி முறையில் பங்குபற்றி வருகின்றனர்.